Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

19 மே, 2021

தரம் 10 மாணவர்களுக்கான தமிழ் grade 10 and 11 student tamil notes

 

நீதிப் பாடல்கள்

 

 

1.விவேக சிந்தாமணி

 தொகுப்பு நூல், தனித்துவமானது

 பிற்காலத்து அறிஞர்களால் தொகுக்கப்பெற்றது

 பல நூல்களிலிருந்து திரட்டப் பெற்ற பாக்களைக் கொண்டது

தரப்பட்ட பாடலில் நல்லவர்களான அறிஞரை நல்லவர்களாலேதான்

அறிய இயலுமாயிருக்கும் என்றும் எடுத்துக் கூறப்படுகிறது

 

 2.வெற்றி வேற்கை

பாடியவர் - அதிவீரராமபாண்டியன்

 

3.வாக்குண்டாம்

பாடியவர் - ஔவையார்

 

4.திரிகடுகம்

சங்க மருவிய கால நூல் ஆகும்

பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஒன்று ஆகும்

திரி - மூன்று என பொருள்படும்

கடுகம் - கடுகு (சுக்கு, திப்பிலி, மிளகு) குறிக்கும்

இம் மூன்றும் உடலுக்குச் சுகமளிப்பது போல, திரிகடுகம் எனும் நூல் உயிருக்கு

உறுதியளிக்கும்

இம் மூன்று விடயங்கள் இந்நூலின் பாடல்தோறும் கூறப்பட்டுள்ளன

100 பாடல்கள் கொண்ட நூலாகும்

ஆசிரியர் - கணக்காயர்

 

5.முதுமொழி வெண்பா

 இலங்கை அறிஞர் புலவர்மணி அல்-ஹாஜ் .மு.ஷரிபுத்தீன் அவர்களால் பாடப்பட்டது

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் மருதமுனை

 வெண்பா வடிவம் (யாப்பு)

 ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் ஒரு முதுமொழி கூறப்படுகிறது

 மனம் கொண்டதுதான் மாளிகை எனும் கருத்து வலியுறுத்தப்படுகிறது

 

6. நாலடியார்

 சமணமுனிவர்களால் இயற்றப்பட்டது

 சங்க மருவிய காலம், பதினெண் கீழ்க் கணக்கு நூல்களில் ஒன்று

 நானூறு வெண்பாக்களைக் கொண்டது

 நாற்பது அதிகாரங்களாக வகுக்கப்பட்டுள்ளது

 ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துப்பத்துப் பாடல்கள் உள்ளன

 

7.இனியவை நாற்பது

 பதினெண் கீழ்க் கணக்கு நூல்

 கடவுள் வாழ்த்துடன் 41 செய்யுள்களைக் கொண்டது

 செய்யுள்கள் இன்னிசை வெண்பா யாப்பு

 ஆசிரியர்பூதஞ்சேந்தனார்

 

TAMIL STUDY MAX
 grade 10 and 11 student tamil notes 

 

TAMIL STUDY MAX

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்