Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

16 ஜூன், 2021

பிரித்தானியர் ஆட்சியில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் o/l history notes

பிரித்தானியர் ஆட்சியில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள்


பிரித்தானியரால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் சீர்திருத்தங்கள்

கோல்புறூக் கரமன் யாப்பு        –          1833

குறூமக்கலம் யாப்பு                    -           1910

மனிங் யாப்பு                                 -           1920

மனிங் டெவன்சயர் யாப்பு        -           1920

டெனமூர் யாப்பு                            -           1931

சோல்பரி யாப்பு                           -           1947

கோல்புறூக் கரமன் யாப்பு   –          1833


கோல்புறூக் கரமன் யாப்பு   –          1833

ஆளுனர் சேர் ரொபர்ட் ஹேட்டன்



  • இலங்கையின் நிர்வாகத்திற்கு வருமானத்தினை விட அதிக செலவு எற்பட்டமை 

அதற்கு தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டிய தேவை எற்பட்டது. பொருளியல் மற்றும் அரசியல் நிலையினை ஆய்வு செய்ய டபிள்யூ. எச்.ஜீ கோல்புறூக் என்பவர் 1829ம் ஆண்டு  நிதி மற்றும் சட்ட நடவெடிக்கைகளில் காணப்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்ய. 1830ம் ஆண்டு குடியேற்ற நாடுகளின் செயலாளரால்  சார்ள்ஸ். எச் கமரன் என்பவரையும்  அனுப்பிவைக்கப்பட்டனர்


  • கோல்புறூக் கமரன் யாப்பு ஆனது இவர்களுடைய ஆறிக்கை மற்றும் ஆலோசனையின் படி புதிய யாப்பாக அரசியல் சீர்திருத்தம் ஒன்று எழுதப்பட்டது.

இவ் யாப்பின் படி

  1. ஒன்றினைக்கப்பட்டு கண்டி மற்றும் கரையோரங்கள்  ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.


  1. இலங்கயை ஒரு நாடாக பிரகடனம் செய்து அதனை ஒரே நிர்வாகத்தின் கீழ் ஆட்சி செய்ய ஆலோசனை வழங்கினார்


  1. இது 1848 கலவரத்திற்கு ஒரு காரணமாக அமைந்தது.


  1. நாடு ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டது  அவையாவன

    • வட மாகாணம் , தென் மாகாணம் மேல் மாகாணம்,கிழக்கு மாகாணம்,மத்திய மாகணம் என்பவையாகும்


  1.  கட்டாய இராஜகாரிய முறை ஒழிக்கப்பட்டது


  1. அரசின் வர்த்தக ஏகபோக உரிமை அகற்றப்பட்டது.


  1. மத்திய தர வர்க்கம் தோற்றம்.


  •  ஜோர்ஜ் வோல் என்பவர் இலங்கை சங்கத்தினை உருவாக்கினார்
  •  பின்ன்னர் இலங்கயின் மத்திய தர வர்க்கத்தினரின் தோற்றமும் மற்றும் அவர்களின் கோரிக்கைகள் காரணமாகவும் புதிய யாப்பினை இலங்கையில் அமைக்க வழிவகுத்ததை தொடர்ந்து குறூமக்கலம் யாப்பு உருவாக்கப்பட்டது.

   குறூ மக்கலம் யாப்பு.(1910)


  • இவ் யாப்பானது இலங்கயில் இரண்டாவது யாப்பாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • 80 ஆண்டுகளின் பின்னர் ஓர் அரசியல் யாப்பு மீண்டும் அமைக்கப்பட்டது  இதைனைத்தொடர்ந்து இக் காலத்தில் சமூக பொருளாதார மாற்றங்கள் பல ஏற்பட்டன.
  • குடியேற்ற நாடுகள் செயளாலரிடம் 1908ம் ஆண்டு டிசெம்பர் மாதம் ஜேம்ஸ் பீரிஸ் என்பவர் புதிய அரசியல் சீர்த்திரத்ததின் தேவை பற்றிய அறிக்கை ஒன்றினை கையழித்தார். மற்றும் பல இயக்கங்கள் இக் கோரிக்கையினை முன்வைத்தன.


  • 1910 நவம்பர் மாதம் குடியேற்ற நாடுகளின் செயலாளர் நாயகமாகிய குறூ பிரபு மற்றும் இலங்கையின் ஆளுனராகிய மக்கலம் அவர்களும் புதிய யாப்பினை (குறூ-மக்கலம் யாப்பு) அறிமுகப்படுத்தினார்

 யாப்பின் அம்சங்கலாக பின் வருவன காணப்பட்டது.


  1. சட்டவாக்க கழகத்திற்கு முதன் முறையாக வாக்குரிமை மூலம் அங்கத்துவர்களை தெரிவு செய்யப்பட்டனர்.


  1. இலங்கையருக்கான கல்வி கற்ற ஒருவர் தெரிவு செய்யப்பட்டார்.முதல் முதலில் தெரிவு செய்யப்பட்ட கல்வி கற்ற இலங்கையராக சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.



  1. வக்குரிமை வரையறுக்கப்பட்டிருத்தல். தகமை, சொத்து என்பன வாக்குரிமையில் செல்வாக்கு செலுத்தியது.


  1.  இவ் யாப்பின்  பின்னரும் ஆளுனரின் அதிகாரமே  சட்ட சபையில் ஓங்கியிருந்தது.



மது ஒழிப்பு இயக்கம் (1912 - 1915)


குறூமக்கலம் யாப்பு இலங்கையரின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. இதனால் மத்திய தர வர்க்கத்தினர் அதிருப்தியடைந்தனர்.

1912 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் மதுபானசாலைகள் அமைக்க அனுமதி அளிக்கும் சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதனால் மது ஒழிப்பு இயக்கம் இதனை எதிர்ப்பதற்காக  தோற்றம் பெற்றது


இந்திய தேசிய இயக்கத்தின் தாக்கம்


19ஆம் நூற்றாண்டில் இலங்கையை போல் இந்தியாவிலும் பிரித்தானியர் ஆதிக்கத்தினை பெற்றிருந்தனர்.


இந்தியாவில் பல தலைவர்கள் 1885ஆம் ஆண்டு  தமது போராட்டங்களை முன்னெடுத்தனர் இதனால் ஆங்கிலேயர்  1918ஆம் ஆண்டில் சிறந்த அரசியல் சீர்திருத்தம் ஒன்றை வழங்கியிருந்தனர்.


  1. சுரேந்திரநாத் பானாஜீ

  2. பால கங்காதர திலகர்

  3. மகாத்மா காந்தி

  4. ஜவகர்லால் நேரு ஆங்கிலேயருக்கு எதிராக கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டனர்.


இலங்கையின் அரசியல் தலைவர்கள் 

குடியேற்ற நாடுகளின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடாத்துதல்.

தமது அரசியல் சீர்த்திருத்தங்களை வேண்டி பிரித்தானியாவுக்கு முறைப்பாட்டு மனுக்களை முன்வைத்தல் போன்ற நடவெடிக்கைகளில் மாத்திரம் முன்னேடுத்தனர்

மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு  போன்றவர்கள் இலங்கை மக்களுக்கு உரையாற்றி சில நாட்கள் தங்கியிருந்து சென்றனர்.

அதன் பின்னர் (1915) இலங்கையின் அரசியல் தலைவர்கள் தங்களுடைய போராட்டங்களை ஒழுங்கமைத்த இயக்கங்கள் மூலம் முன்னெடுத்தனர்.

இதன் தோற்றமே இலங்கை தேசிய இயக்கமாகும்.


 


இலங்கை தேசிய இயக்கம்


1915ஆம் ஆண்டு சிங்களமுஸ்லீம் கலவரத்தினை இராணுவ சட்டம் மூலம் கட்டுப்படுத்தியது பிரித்தானிய அரசு இதன் பின்னர் நிர்வாக நடவெடிக்கைகளில் அதிக அதிகாரம் இலங்கையருக்கு இருக்க வேண்டும் என உணர்ந்தனர்.


 அதன் முயற்சியாக 1919ஆம் ஆண்டு அரசியல் போரட்டங்களை முன்னெடுக்க சக்திவாய்ந்த ஓர் குரலாக இருக்க, இலங்கையில் காணப்பட்ட அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் அமைப்புக்களை ஒன்றுபடுத்தி உருவாக்கப்பட்ட அமைப்பே இலங்கயின் தேசிய இயக்கமாகும்.

சேர். பொன் இராமனாதன் அவர்கள் 1915ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையின் முன்னனி அரசியல் போராட்ட தலைவராக இருந்தார் அவர் இவ் இயக்கத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டர்.


மனிங் அரசியல் யாப்பு சீர்திருத்தம்(1920) 

 குறூ மக்கலம் அரசியல் யாப்பு சீர்திருத்ததில்திருப்தியடையாத இலங்கையர்களால் பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

இதன் விளைவாக ஆளுனர் மனிங் என்பவரால் 1920 ஆம் ஆண்டு  ஓர் யாப்பு    மேற்கொள்ளப்பட்டது.

  1. முதல் முறையாக சட்டவாக்க கழகத்தில் உத்தியோக சார்பற்றோர் பெரும்பாண்மை

  2. பிரதேசவாரிப் பிரதிநிதித்துவ முறை

  3. வரயறுக்கப்பட்ட வாக்குரிமை

  4. இனவாரிப் பிரதிநிதித்துவ முறையும் காணப்பட்டது.

  5. ஆளுனர் அதிகாரமே மேலோங்கி காணப்பட்டது.




மனிங் டெவன்ஷயர் அரசியல் சீர்திருத்தம்(1924)


 இச் சீர்திருத்தம் மூலம் சட்டவாக்க சபையில் உத்தியோக சார்பற்றோர் தொகை அதிகரித்தது மிக முக்கியமான ஓர் அம்சமாகும்.

ஆளுனரிடம் ஆட்சி நடாத்த அதிகாரம் கொடுக்கும் பெறுப்பு மக்கள் பிரதிநிதிகளான சட்டசபையிடம் இருந்தது. (மக்கள் பிரதிநிதிகள் சட்ட சபையில் அதிக செல்வாக்கினை  கொண்டிருந்தர்கள்)

அகவே இதை அதிகாரமும் பொறுப்பும் வேறுபடுத்தப்பட்ட ஆட்சிமுறை என்று அழைத்தனர்.


டொனமூர் அரசியல் சீர்திருத்தம் (1931)


டொனமூர் பிரபுவின் தலைமையில் ஆணைக்குழு 1927ஆம் ஆண்டு இலங்கை வந்து மக்கள்ளின்  கருத்துக்களை பெற்று சீர்திருத்தமொன்றை அறிமுகப்படுத்தியது.


இலங்கை ஆளுனரான கியூ கிளிபார்ட் அவர்கள் இலங்கையில் ஆட்சி நடாத்துவதில் இருக்கும் பிரச்சனைகளை குடியேற்ற நாடுகளின் செயலாளரிடம் எடுத்துக் கூறிய பின்னர் 1927 ஆம் ஆண்டு டொனமூர் பிரபுவின் தலைமயில்  ஆணைக்குழு ஒன்று இலங்கையின் பிரித்தானிய அரசினால் நியமிக்கப்பட்டது.


டொனமூர் குழுவினரின் வருகை


இவர்களால் இலங்கை மக்களிடையே காணப்பட்ட பிரச்சனைகளை ஆராய்ந்து அறிக்கை மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் 1931 ஆம் வருடம் டொனமூர் எனும் அரசியல் அமைப்பு இலங்கையில் நடைமுறைப் படுத்தப்பட்டது


டொனமூர் விதந்துரைப்புகளில் முக்கிய விடயங்கள்


  • சகல ஆண் பெண்களுக்கும் சர்வசன வாக்குரிமை 21 வயதாக்கப்பட்டது.

                                                             

  • இலங்கை சட்டவாக்கப் பேரவை இற்குப் பதிலாக இலங்கை அரச சபையை அமைத்தமை.


  • சுதேச மக்கள் நிர்வாகத்தில் ஈடுபடுவதற்காக நிர்வாகக் குழு முறையை ஏற்படுத்தியமை.


  • உள்நாட்டு நிர்வாகப் பொறுப்புகளை வழங்கியமை.




இலங்கை வரலாற்றில் மிக முக்கிய இடம் பெற்ற இவ் யாப்பின் முக்கிய அம்சங்களை பார்ப்போம்.


  1. இந்த யாப்பின் காரணமாக சட்டவாக்க கழகம் அரசுக்கழகமாகியதுடன் அங்கத்தவர்கள் எண்ணிக்கை 61 ஆக அதிகரிக்கப்பட்டது.


  • இதன் பிரதிநிதிகள் பின்வரும் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டமை இவ் யாப்பின்  முக்கிய அம்சமாகும்.
  • இதற்கு தலைமை வகிப்பவர் அரச கழகத்திலிருந்து தெரிவுசெய்யப்படும் ஒருவராவார்.


டொனமூர் அரசாங்கசபையின் கட்டமைப்பு


  • மொத்த உறுப்பிர்கள் தொகை 61.

  • சர்வசன வாக்குரிமை மூலம் 50 உறுப்பினர்கள்.

  • இனரீதியான நியமனம் 8 உறுப்பினர்கள்.

  • உத்தியோக சார்புள்ளோர் 3 பேர்.

  • பிரதம செயலாளர்.

  • நிதிச் செயலாளர்

  • சட்டத்துறை நாயகம்.


அரசாங்க சபை சட்டங்களைக்கும் அதிகாரம் பெற்றிருந்தது.

இச்சட்டங்களை அமுல்படுத்த தேசாதிபதியின் அங்கீகாரம் அவசியம் ஆகும்.


நிர்வாகக் குழு முறை


இலங்கையில் மந்திரிசபை முறையை ஏற்படுத்தக்கூடிய அரசியல் கட்சிகளோ,அரசியல் சூழ்நிலையோ  காணப்படவில்லை.


உள்நாட்டு மக்களுக்கு உள்ளுராட்சி நிர்வாகப் பொறுப்புக்களை வழங்குவதற்காகவே இவ் நிர்வாக் குழு ஏற்படுத்தப்பட்டது.


அரசாங்க சபையில் மொத்த உறுப்பினர்கள் 61 பேரில் 3 அரசாங்க உத்தியோகத்தர்களையும், சபாநாயகரையும் தவிர ஏனைய 57 உறுப்பினர்களும் 7குழுக்களாக பிரிக்கப்பட்டனர் .(குறைந்தது 7 கூடியது 9 எனும் அடிப்படையில்) இவ்வாறு பிரிக்கப்பட்டு 7 இலாகாக்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன.


  • உள்நாட்டலுவல்கள் -D.Pஜயதிலக்க

  • விவசாயமும் காணியும் -D.S சேனா நாயக்க

  • உள்ளுராட்சி-C.பட்டுவன் துடாவ

  • சுகாதாரம்- P.பான பொக்கை

  • கல்வி-C.W.W கன்னங்கர

  • போக்குவரத்தும் பொது வேலைகளும்-N.M.மாக்கான் மார்கர்

  • தொழில் கைத்தொழில் வர்த்தகம்-P.சுந்தரம்


இம் முறையே நிர்வாகக்குழு முறை என அழைக்கப்படுகின்றது.




சுதந்திரமான கல்வி முறை


விவசாய குடியேற்ற திட்டங்கள் போன்றவையான பொதுமக்கள் சார்ந்த சேவைகள் செயற்படுத்தப்பட்டுள்ளது


ஆளுனரும் அரச திகாரிகளும்.


ஆளுனரின் அதிகாரம் பெருமளவில் குறைக்கப்பட்டமை இவ் அரசியல் யாப்பின் மற்றுமோர் சிறப்பம்சமாகும்.

ஆளுனர் அமைச்சர்களுடனும் அரசு கழகத்துடனும் ஒத்துழைத்து செயற்பட வேண்டியேற்பட்டது.


இவ் யாப்பின் குறையாக கருதப்படுவது.


நிதி, சட்ட மற்றும் பாதுகாப்பு நடவெடிக்கைகள் என்பன அரச அதிகாரிகளின் கீழ் வைக்கப்பட்டது


இலங்கையின் சுதந்திரத்திற்கான போராட்டம் பற்றி எமது அடுத்த பதிவில் பார்போம்.


இந்த பதிவை PDF அக பெற்றுக் கொள்ளவும்

DAWNLOAD PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்