Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

23 மே, 2021

எம்.சார்ளிஸ் grade 10 Art notes in tamil

 

எம்.சார்ளிஸ்

 

எம்.சார்ளிஸ் அல்லது மாலிகாவகே சார்ளிஸ் என்னும் கலைஞர் இலங்கையின்சித்திரக் கலையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய யுக புருஷராகக் கருதப்படுகிறார்.

 

இவர் 1880 ஆம் ஆண்டு யூன் மாதம் 25ஆம் திகதி அம்பலாங்கொடையில் பிறந்தார்.இவர் பாளி, சிங்களம், சமஸ்கிருதம் எனும் மொழிகளைக் கசடறக் கற்றார்.

கொழும்பு மாலிகாகந்த வித்யோதயப் பிரிவேனாவில் உயர் கல்வியைக் கற்றார்

அக்காலத்தில் புகழ்பெற்ற ஓவியரான ரிச்சட் ஷென்றிக்கஸ் என்பவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அத்துடன் கடொல்கல்கே மகா சித்தர குருன்னான்சேயின்கீழ் விகாரை ஓவியங்கள் வரைய ஆரம்பித்து அதனைத் தொடர்ந்தார்

அவர்வரைந்த தனித்துவமான முதல் ஓவியம் கொழும்பு மாலிகாகந்த விகாரையில் அமைந்துள்ளது.

காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இலங்கை வாழ் மக்கள் பலர் மேற்கத்ததேயபழக்க வழக்கங்களைப் பின்பற்றியதுடன் விக்ரோரியா மகாராணியின் அரசகுடும்பத்தினரின் படங்களையும், சர்வதேச நிலக்காட்சிகளையும் தமது வீட்டுச்சுவர்களை அலங்கரிக்கப் பயன்படுத்தினர். இக்கால கட்டத்தில் எம்.சார்ளிஸ் என்னும் ஓவியர் பௌத்த ஓவியங்களை வரைந்து ஜேர்மனிக்கு அனுப்பி அவற்றை லிதோஅச்சு முறையில் அச்சிட்டு சிங்கள பௌத்த மக்களுக்கு விநியோகித்தார்

கி.பி.1923 ஆம் ஆண்டளவில் லிதோ அச்சு முறையில் கிட்டத்தட்ட 36 ஓவியங்கள் அளவில் அச்சிட்டு வெளியிட்டார்.

 

 

எம்.சார்ளிஸ் அவர்களினால் லிதோ அச்சு முறையில் அச்சிட்டு வெளியிடபட்ட ஓவியங்கள் சில

  1. சித்தார்த்தரின் பிறப்பு.
  2.  தாமரைப் பூவில் நடந்து வருதல்.
  3.  கல்வி கற்றல்.
  4.  சித்தார்த்தரின் திருமணம்.
  5.  சித்தார்த்தரும் பிரஜாபதி கோதமியும்.
  6.  துறவறம் பூணுதல்.
  7.  சீவலி பிக்கு.

 

 TAMIL STUDY MAX

இவரது பௌத்த ஓவியங்கள், விகாரை ஓவியம், லிதோ முறையில் அச்சிடப்பட்டஓவியங்கள் என இரு வகைகளைக் கொண்டுள்ளன.

 

எம்.சார்ளிஸ் கலைஞர் தனது ஓவியங்களை மேற்கத்தேயக் கலை மரபின் தாக்கத்தைக் கொண்டு அவற்றுக்கு ஒத்ததாக வரைந்துள்ளார்.

 

சித்திரக் கலையைப் போன்றே இவர் சிலை செய்வதிலும் வல்லவராகக் காணப்பட்டார். மாத்தறை வெஹெறகேனயில் உள்ள பாரிய புத்தர் சிலை இவரது திறமையைஎடுத்துக் காட்டுகிறது.

 

எம்.சார்ளிஸ் வரைந்த ஓவியங்கள் காணப்படும் பௌத்த விகாரைகள்:

  1.   கொழும்பு மாலிகாகந்த விகாரை.
  2.  கரகம்பிட்டிய சுபோதாராமய.
  3.  மத்துகம பாந்திய சிறி மங்கலாராமய.
  4.  பொத்துபிட்டிய பூஜாராமய


எம்.சார்ளிஸ் ஓவியக் கலைஞரின் ஓவியங்களிற் காணப்படும் கலை அம்சங்கள்

  • சரியான ஒழுங்கிணைப்பு.
  •  தூரதரிசனத் தன்மை.
  •  ஒளி நிழல் காட்டல்.
  •  நிறப் பிரயோகம்.
  •  அலங்காரத் தன்மை.
  •  ஐரோப்பியக் கலை மரபின் ஒத்த தன்மை.

 TAMIL STUDY MAX

பௌத்த சமயஞ்சார் ஓவியக் கலைக்கு பெரும் பணியாற்றிய இவர் 1955ஆம்ஆண்டு நவம்பர் மாதம் 21ஆம் திகதி இறைபதமடைந்தார்.


https://tamilstudymax.blogspot.com/
எம்.சார்ளிஸ் grade 10 Art notes in tamil

TAMIL STUDY MAX


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்