O/L மாணவர்களுக்கான வரலாறு வினா விடை தொகுப்பு-02
10 கைத்தொழிற் புரட்சியினால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் எவை?
1 கைத்தொழில் உற்பத்தி அதிகரிப்பு, வர்த்தக நடவடிக்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தல் என்பன ஏற்பட்டன.
2; தன்னிறைவுப் பொருளாதாரம் மறைந்து சம்பளத்திற்கு வேலை செய்யும் வகுப்பு தோன்றியது.
3 விவசாயப் பொருளாதாரம் வைpடப்பட்டு ஏற்றுமதி, இறக்குமதி அடிப்படையிலான வர்த்தகப் பொருளாதாரம் தோன்றியது.
4 உலகெங்கும்
முதலாளித்துவ பொருளாதாரம் வேகமாகப் பரவியது.
5 முயற்சியாளர்கள் ஒன்றிணைந்து தனித்தனி கூட்டு வர்த்தகக் கம்பனிகளை அமைத்தனர்.
6 வங்கிகள்
தோற்றம் பெற்றன.
11 கைத்தொழிற் புரட்சியினால் சமூகத்தில்; ஏற்பட்ட மாற்றங்கள் எவை
நன்மைகள்
1 ஏராளமான
வேலை வாய்ப்புக்கள் கிடைத்தன.
2 மக்களின்
வாழ்க்கைத்தரம் உயர்ந்தமை
3 நகரங்கள்
தோன்றியமை
4 தொழிலாளர்
நரனோம்பல் முறை விருத்தியடைந்தமை
5 கொள்வனவுச்
சக்தி அதிகரித்தது.
தீமைகள்
1 நகரங்களில் சனநெருக்கடி காரணமாக அடிப்படை வசதிகள் மிகக்குறைந்த வேகத்தில் வளர்ச்சயடைந்தமை.
2 செல்வந்தர், ஏழை என்ற வகுப்பு ரீதியான சமுக அமைப்ப தோன்றியது.
3 செல்வந்தர் ஆடம்பரமான வாழ்க்கை நடத்த உழைப்பவர்களின் வாழ்க்கை கவலைக்கிடமாக மாறியது.
4 தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே வாழ்ந்தமையால் சேரிப்புறங்களில் வாழ்ந்த அவர;களின் சுகாதார வசதிகள் சரியாக கிட்டவில்லை.
5 ஒரே அறையில் ஒரு குடும்பம் வாழ்ந்தமையால் மதுகாவனையின் பயன்பாடு, தவறான செயல்களில் ஈடுபடல் போன்ற கலாசார சீரழிவுகளும் ஏற்பட்டன.
6 சூழல்
மாசடைதல் ஏற்பட்டது.
7 பெண்கள், சிறுவர்கள், முதியோர் பாதுகாப்பு இல்லாத தொழிற்சாலைகளில் வேலை செய்தனர்.
12 இலங்கையில் கைத்தொழில் புரட்சியின் தாக்கங்கள் எவை
போக்குவரத்துத்துறை
1 1885இல்
பெருந்தெருக்களை அமைக்கும் முறை தோன்றியது.
2 பாதைகளும்
புகையிரதப் பாதைகளும் அமைக்கப்பட்டமை
3 பொருட்களை கொண்டு செல்வதற்காக பெருந்தெருக்களும், புகையிரத வீதிகளும் அமைக்கப்பட்டது.
4 ஆறுகளுக்கு குறுக்காக மரப்பாலங்கள் அமைப்பதற்குப் பதிலாக இரும்புப்பாலம் அமைக்கப்பட்டன
5 கொழும்புத்
துறைமுகம் அபிவிருத்தி செய்யப்பட்டது
6 ஆளுநர்எட்வேட்பாண்ஸ் காலத்தில் கொழும்பு – கண்டி பிரதான வீதி அமைக்கப்பட்டது.
7 ஆளுநார் ஹென்றிவோட் அவர்கள் புகையிரதத வீதிகளை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்
8 பின்வரும்
புகையிரதப்பாதைகள் அமைக்கப்பட்ட ஆண்டுகள்
1863 – கண்டி
– கொழும்பு
1871 – பேராதனை
– நாவலப்பிட்டி
1899 – பேராதனை
– பண்டாரவளை
தொடர்பாடல் துறை
1 1815இல் கொழும்பு, காலி, திருகோணமலை, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் அரசாங்க தபால் சேவை ஆரம்பிக்கப்பட்டது.
2 ஆசியாவில் குதிரை வண்டிகளைப் பயன்படுத்தி தபால் சேவை இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது.
3 1857இல்
தபால் முத்திரை வெளியிடப்பட்டது.
4 1858இல் தந்தி மூலம் செய்தி பரிமாறும் முறை ஆரம்பிக்கப்பட்டது.
பெருந்தோட்டத்துறை
1 1804இல் பிரெட்ரிக்நோத்தினால் கோப்பி விதைகளைப் பிரித்தெடுக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.
2 தேயிலைக் கொழுந்தை உலர;த்துதல் தொடக்கம் ஏற்றுமதிக்காகத் தரப்படுத்தல் வரை இயந்திர சாதனங்களால் மேற்கொள்ளப்பட்டமை.
3 இறப்பரை ஏற்றுமதிக்கு தயார்படுத்துவதற்காக இயந்திர சாதனங்கள் பயன்படுத்தப்பட்டன.
இவ் பக்கம் பற்றிய உங்கள் கருத்துக்களை மற்றும் உங்களுக்கு தேவயான விடையங்களை கருத்திடுக
O/L மாணவர்களுக்கான வரலாறு வினா விடை தொகுப்பு-02 O/L history question with answer |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக