ஸ்ரான்லி அபேசிங்ஹ ஓவியங்கள்
1.மட்பாண்டக்கூடம்
ஸ்டான்லி
அபேசிங்ஹவினது ஓவியங்களுள் ‘மட்பாண்டக் கூடம்’ எனும் ஓவியம்தனிச் சிறப்பானது.
இந்த
ஓவியம் ஒரு மட்பாண்டக் கடையையும்
ஒரு தம்பதியினரையும் காட்டுகின்றது.
இச்சித்திரத்தின்
பின்னணியாக மண்பாண்டங்களாலான சூழல் அமைந்துள்ளது. இதன்முன்பகுதியும் பின்பகுதியும் ஒரே தளமாகக் காட்டப்பட்டுள்ளன.
சித்திரத்தில்
ஆழமும் முப்பரிமாணத் தன்மையும் கையாளப்பட்டுள்ளது. வர்ணந் தீட்டும் முறையினாலேயே இவை காட்டப்பட்டுள்ளன.
இருண்ட
நிறங்கள், எதிர் நிறமான மஞ்சள் நிறப் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் மனித உணர்வுகளை முனைப்புறுத்திக்
காட்டுவதில் கலைஞர் வெற்றி கண்டுள்ளார்.
சித்திரத்தின்
வெளிப்பாட்டுத்தன்மையை அழுத்துவதற்காக வெளிப்பாட்டுத்தன்மையுடன் உயிரோட்டமான நீளம் குறைவான தடித்த கருநிறக்கோடுகளைப் பயன்படுத்தி நிறப்பிரதேசங்கள் விரிவாகக் காட்டப்பட்டுள்ளன.
முகத்தில்
உணர்வுகளை வெளிக்காட்டுவதற்காக இருண்ட நிறங்களுடன் பாவ வெளிப்பாடுகள் நன்கு
ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.
ஸ்டான்லி
அபேசிங்ஹவினது ஆக்கப்பாணி மீது, மரபுரீதியான கலையின் பாணிசார்ந்த வடிவங்கள், பின் மனப்பதிவுவாத, வெளிப்பாட்டுவாத
ஓவியக்கலைப் போக்குகள், வர்ணப் பயன்பாடு, கனவடிவவாதக் கலையின் பின்னணி வெளிப்பண்புகள் ஆகியன செல்வாக்குச் செலுத்தியுள்ளமையைக் காணமுடிகின்றது.
2.ஊர்வலம் (பெரகரா)
ஸ்டான்லி
அபேசிங்ஹவினது படைப்புக்களுள் ‘ஊர்வலம்’ எனும் ஓவியமும் முக்கியஇடத்தைப் பெறும் ஒரு படைப்பாகும்.
கண்டி,
ஆவணி ஊர்வலத்தைக் கருப்பொருளாகக் கொண்டு வரையப்பட்ட இந்தப் படைப்புக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள இருட்சாயல் ஒளிப்பான நிறங்கள்,எதிர் வர்ணங்கள் ஊடாக சித்திரத்தின் அழகு
புதியதொரு விதத்தில் காட்டப்பட்டுள்ளது.
இருட்சாயல்
வெளிச்சமான வர்ணங்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தி இராக்காலத்தைச் சித்திரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சி சித்திரத்தை மேலும் பொருளுள்ளதாக மாற்றியுள்ளது.
இராக்காலத்தைச்
சித்திரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள இருள் - ஒளி நிலைமைகளை நிறங்கள்
மூலம் காட்டப்பட்டுள்ளதோடு, ஊர்வலத்தின் வெவ்வேறு அம்சங்களும் கூறுகளும் விரிவாகக் காட்டப்பட்டுள்ளன.
கோடுகளைக்
கையாள்வதை விட, வர்ணங்களைச் சிறப்பாகக்
கையாள்வதன் மூலம்,உருவங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. உருவப் பயன்பாட்டின்போது கருப்பொருளின் முக்கிய அம்சமாகிய, தாதுப்பேழையைத் தாங்கிய யானைச் சித்திரத்தின் நடுப்பகுதியில் இடப்பட்டுள்ளது.
முன்பகுதி
- பின்பகுதி எனக் கருதாது ஒரே
தளத்தில் உருவங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள போதிலும், வர்ணந் தீட்டும் நுட்ப முறைக்கேற்ப முன்பகுதி - நடுப்பகுதி -பின்பகுதி ஆகியனவற்றை நன்கு ஒழுங்கமைத்து இடப்படுத்துவதன் மூலம் சித்திரத்தின் ஆழத்தைக் காட்டுவதில் கலைஞர் வெற்றியடைந்துள்ளனர்.
இப்படைப்புக்காக,
கனவடிவக் கலையின் பின்னணி வெளிப்பண்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு பாணி சார்ந்த வடிவங்கள்,
பின் மனப்பதிவுவாத மற்றும் வெளிப்பாட்டுவாத ஓவியக்கலைப் போக்கின் வர;ணப் பயன்பாட்டின்
செல்வாக்கையும் இப்படைப்பில் காணலாம்.
ஸ்ரான்லி அபேசிங்ஹ ஓவியங்கள் Grade 11 art notes in tamil |
TAMIL STUDY MAX |
ஓவியம் வரைன்ந்தவர்ள் பற்றி பதிவிடுக
பதிலளிநீக்கு