Tamil Study Max

Post Top Ad

Your Ad Spot

21 மே, 2021

முதலியார் ஏ. சீ. ஜீ. எஸ். அமரசேகர ஓவியங்கள் grade 11 art notes in tamil

 முதலியார் ஏ. சீ. ஜீ. எஸ். அமரசேகர  ஓவியங்கள்



பேயோட்டியின் மகள்

தற்போது கொழும்பு, தேசிய கலா பவனத்தில் நிரந்தரமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பேயோட்டியின் மகள்எனும் ஓவியம் கன்வசுத் தளத்தில் எண்ணெய் வர்ணத்தினால் படைக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஓவியத்தல் உள்ள பேயோட்டியின் மகள், சாந்திக் கிரியைகளுக்குரிய உடைகள் அணிந்த நிலையில் உள்ளாள். அக்கணத்தில் அச்சமடைந்துள்ள விதம் இந்த ஓவியத்தில் காட்டப்பட்டுள்ளது.

 

மனிதனின் அக உணர்வுகளைக் காட்டும் யதார்த்தப்பாணி மற்றும் கற்பனைப்பாணி இயல்புகளின்படி ஆச்சரிய மற்றும் மறைந்த நிலை கருப்பொருள்களைக் கொண்ட கற்பனையான ஒரு விடயத்தைக் கருவாகக் கொண்டு இக்கலைப்படைப்பின் வெளிப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது.

 

சித்திரத்தில் காட்டப்பட்டுள்ள தீச்சுவாலை, அவளது முகத்தில் காட்டப்படும் உணர்வுகளுக்கு ஒப்பிடும் வகையில் சித்திரிக்கப்பட்டுள்ள வேடமுகம், பாரிய அளவுடைய நிழல் ஆகியன மூலம் ஒட்டுமொத்த கலைப்படைப்பின் வெளிப்பாட்டுத்தன்மையையும் நாடகப்பாங்கான தன்மையும் அழுத்தப்பட்டுள்ளது.

 

இந்த ஓவியத்தில் இரண்டு தளங்கள் உள்ளன. அத்தளங்களில் உருவங்களும்நிறங்களும் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

இந்த ஓவியத்தில் வர்ணப் பயன்பாடுகியுரஸ்கியுரோ(Chiaroscuro)முறையில்கையாளப்பட்டுள்ளதும், ஒளியினதும் நிழலினதும் தன்மை நன்கு வெளிப்படுத்திக்காட்டப்பட்டுள்ளது.

 

பயன்படுத்தப்பட்டுள்ள வர்ணங்கள் ஒரு தனி நிறப் பண்புகளைக் கொண்ட செவ்வியல்வர்ணங்களாகும்.

 

சித்திர உருக்களின் விவரங்கள் (details)முனைப்பாக்கப்படும் (highlight)வகையிலேயே இருண்ட நிறப் பயன்பாட்டினுள் ஒளி கையாளப்பட்டுள்ளது.

                                                                                                              TAMIL STUDY MAX

 

தொழிலின்மை (Unemployed)

 

 

கலைஞர் . சீ. ஜீ. எஸ். அமரசேகர வரைந்ததொழிலின்மைஎனப் பெயரிடப்பட்டுள்ளஇந்த ஓவியம்தச்சனின் வீடுஎனும் பெயரிலேயே பிரபல்யமடைந்துள்ளது.

 

கன்வசுத் தளத்தில் எண்ணெய் (தைல) வர்ணத்தினால் சித்தரிக்கப்பட்டுள்ளதச்சனின்வீடுஎனும் இந்த ஓவியம் கொழும்பு, தேசிய கலாபவனத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

 

தச்சனின் வீட்டில் நிலவும் வறுமை நிலையைக் காட்டுவதற்காக மிகச் சிறப்பாக

மனித உருவங்களும் வர்ணங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

 

யன்னலின் ஊடாக வீட்டினுள் புகும் ஒளி மிக இயல்பான வகையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

அவ்வொளியின் மூலம் தச்சனது வீட்டாரின் முகங்களில் தோன்றும் உணர்வுகள்மிகச் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன.


https://tamilstudymax.blogspot.com/
முதலியார் ஏ. சீ. ஜீ. எஸ். அமரசேகர  ஓவியங்கள் grade 11 art notes in tamil

TAMIL STUDY MAX


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பிரபலமான இடுகைகள்

Post Top Ad

Your Ad Spot

பக்கங்கள்